Friday, February 5, 2010

காதல்

உணர்ந்தவர்கள் மட்டுமே
உரை எழுத முடிகின்ற
உன்னதமான உணர்வு
கண்களால் விதையெடுத்து
இதயத்தில் நடப்படும்
ஒரு மலர்ச்செடி
காற்றுப் புகாத
கண்டங்களிலும்
கண்டிப்பாய் நுழைந்திருக்கும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உருகுவதே இதன் குணம்
சோகமே பிடித்தமான “ரசம்”
காவியங்கள்
பல கொடுத்தாலும்
கர்வமில்லாதது…
இது
சில பேரால் தூற்றப்படும்!
சில பேரால் போற்றப்படும்!
சில பேரைப் பைத்தியமாக்கும்!
சில பேரை ஞானியாக்கும்! – ஆனால்
அனைவரையும் கவிஞனாக்கும்!!!!

No comments:

Post a Comment