Thursday, February 25, 2010

நீ இல்லாத போது...


உனக்காக
எப்போதும் வாங்கும்
இரண்டு முடி மல்லிகையை
இன்று
பூக்காரக் கிழவி
விற்காமல் எடுத்துப் போவது
எத்தனைச் சோகமானது!

*
நீ பொரி போட்டுப்
பசியாற்றிய
கோயில் குளத்தின் மீன்கள்
இன்று தண்ணீர் குடித்துத்
தண்ணீர் குடித்து
உன்னைத் தேடிய தவிப்பு
எத்தனை துயரமானது!

*
நீ வராத
வெறுமையில்
பூங்காவின் காவலாளிக்கு
ஒரு புன்னகையைக் கூட
திருப்பித் தராமல்
இன்று நான் வெளியேறுவது
எத்தனை உறுத்தலானது.

****பழநிபாரதி

Wednesday, February 24, 2010

கவிஞர்களின் கவிதைகள்

பறக்கத் தெரியும்
திசை தெரியாது
காதல் ஓர்இலவம் பஞ்சு.

கபிலன்
*******

என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில்
நனைந்துவருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.
பழநிபாரதி
*********

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்ககாத்திருக்கிறோம்!

நா.முத்துக்குமார்
************

காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!

நா.முத்துக்குமார்
***********

கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!

பா.விஜய்
********

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கிவழுக்குது
மல்லிகைப் பூவும் என்மனசும்.
கம்பெனி சைக்கிளில்
போகும் உனை
வாடகை சைக்கிளில்
தொடர்வேன்.
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்
செயினும் என் தைரியமும்.
பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்து விட்டு
வரக்கூடாதா?

பா.விஜய்
**********

ரோஸ் ஜஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்!
நிற மாற்ற விதி
என்பது
இயற்பியல் அல்ல
இதழியல்!

பா.விஜய்
**********

சின்ன வயசில்
நிறையசிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றிஎழுதத் தானோ?

பா.விஜய்
*********

இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்பார்க்கும்
வரைதெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்என்பது.

பழநிபாரதி
********

யாரோ நம் பெயரைசுவரில்
கிறுக்கியிருந்ததைப்படிக்கும்
பொழுது அச்சமாக இருந்தது.
நேற்று அதன்மீது
காதல் திரைப்பட போஸ்டரை
ஒட்டியிருந்ததைப் பார்க்க
மகிழ்வாக இருந்தது.

கபிலன்
*********

உன் காலடியில்
ஊரும் எறும்பைதயவுசெய்து
நசுக்கிவிடாதே
அது இழுத்துவரும்
இரைநம் காதலின் பெயரெழுதிய
அரிசியாக இருக்கலாம்.

பழநிபாரதி
*******

நீ ஒரு முறைதான்
பார்த்துவிட்டுப் போனாய்என்
வீட்டு ஆளுயரக்கண்ணாடி
உன் நிழற்படமாகிவிட்டது.

பழநிபாரதி
**********

இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே என்னை நீ
என்ன செய்கிறாய் என்றேதெரியவில்லை.

பழநிபாரதி
*********

நீ பருவமகள்
உண்மைதான்.
குளித்து முடித்த உன்கூந்தலில்
நீர் சொட்டும் போது
மழைக்காலம்.
சீவும்போது
இலையுதிர்காலம்.
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்.
அதை அள்ளி
நான் போர்த்திக்கொள்ளும்போது
குளிர்காலம்.

பழநிபாரதி
**********

ஆதாம் ஏவாள் கனவில்
ஆப்பிள் துரத்துகிறது
ஆப்பிள் கனவில் பாம்பு துரத்துகிறது
பாம்பின் கனவில்சைத்தான் துரத்துகிறது
அனைவரில் கனவிலும்தோன்றி
கடவுள் சொல்கிறார்
காதலித்து கெட்டுப் போங்கள்!

நா.முத்துக்குமார்
**********

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்விட்டு
விட்டுகேட்டுக் கொண்டிருக்கிறது
காதல்!

நா.முத்துக்குமார்

கண்களால் காதல் செய்!......

* அவன் :

உன்
விழி பேசியதை
மொழி பெயர்த்தால்
கவிதை என்கிறார்கள்.

*

இதயத்தில் நிறைந்து
விழி வழியே
வழிகிறது
நம் காதல்!

*

பார்த்து பார்த்து
செய்த கண்கள் உனக்கு!
அதைப் பார்த்துக்
கொண்டிருப்பதற்காகவே
செய்த கண்கள் எனக்கு!


*தினமும்
உன் வருகைக்காகக்
காத்திருக்கின்றன..
பகலில் என் கண்களும்..
இரவில் என் கனவும்..


*உனக்குத் தெரியுமா?
நம் கண்களும் கூடக்
காதலிக்கின்றன!
தொட்டுக் கொள்ளாமல்
அவை ஆயிரம்
க(வி)தைகளைப் பேசுவதைப் பார்!
நம்மைப் போல…


*திறந்தே இருப்பதால்தான்
என்செவியில் உன்வார்த்தைகள்
ஒலிக்கிறதென்றால்,
இமைகள் மூடிய பின்னும்
என் விழியில் உன் பிம்பம் விழுகிறதே…
அது எப்படி?


*என் கண்களுக்கு ஏனிந்தப் பேராசை?
எல்லாக் கணமும் உன் கண்களைப்
பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமாம்!
உன் கண்கள் இமைக்கும் பொழுது மட்டுமே
என் கண்களும் இமைப்பதைப் பார்!


*அவள் :

போதும்…போதும்…
கவிதைகள் கொஞ்சம்
ஓய்வெடுக்கட்டும்!
நீ கண்களால் மட்டும்
காதல் செய்!

Tuesday, February 23, 2010

இவள் அழகிற்கு...

இந்த ரோஜா ஏனடா
இவ்வளவு சிவப்பாக இருக்கிறது
என்று என்னிடம் கேட்கிறாய்..?
அடி அசட்டுப் பெண்ணே
உனைக் கண்ட ரோஜா மலர்
இவள் அழகிற்கு
நான் ஈடில்லையே
என்று வெட்கப்பட்டு
நிற்பதால் வந்த சிவப்படி..!

கண்களை மூடிக்கொள்....

பெண்ணே நீ

மௌன விரதம் இருந்தால்

முதலில்

உன் கண்களை மூடிக்கொள்

உன் உதடுகளை விட

உன் கண்கள் தான்

அதிகம் பேசுகின்றன.........

Friday, February 5, 2010

காதல்

உணர்ந்தவர்கள் மட்டுமே
உரை எழுத முடிகின்ற
உன்னதமான உணர்வு
கண்களால் விதையெடுத்து
இதயத்தில் நடப்படும்
ஒரு மலர்ச்செடி
காற்றுப் புகாத
கண்டங்களிலும்
கண்டிப்பாய் நுழைந்திருக்கும்
ஒன்றுக்குள் ஒன்றாய்
உருகுவதே இதன் குணம்
சோகமே பிடித்தமான “ரசம்”
காவியங்கள்
பல கொடுத்தாலும்
கர்வமில்லாதது…
இது
சில பேரால் தூற்றப்படும்!
சில பேரால் போற்றப்படும்!
சில பேரைப் பைத்தியமாக்கும்!
சில பேரை ஞானியாக்கும்! – ஆனால்
அனைவரையும் கவிஞனாக்கும்!!!!

ஹைக்கூ/ ...

அவளுடைய
இதழ்களும் குறள்தானோ?
இரண்டே வரியில்
எத்தனை பாடங்கள்…?

Tuesday, February 2, 2010

அழகு..........

அழகுதான்
அவள் போட்ட கோலத்தை விட
அதை சுற்றி உள்ள அவளின் பாத சுவடுகள்..

உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!

எனக்கு எது பிடிக்கும்,
எது பிடிக்காது,
என்று தெளிவாய் உன்னிடம்
சொல்லத்தெரிந்த எனக்கு
ஏனோ தெரியவில்லை...
"நான் உன்னை காதலிக்கிறேன்"
என்ற வார்த்தையை மட்டும்
சொல்லத் தெரியவில்லை...

நான் எழுதும் ஒவ்வொரு
கவிதையையும் படித்துவிட்டு,
ஒரு புன்சிரிப்புடன்,
இந்த கவிதைக்கு பின்னால்
"யாரோ ஒரு பெண் இருக்கிறாள்"
என்கிறாய்..அது நீ தான்
என்று உனக்கு தெரிந்தும் கூட..

தோழிகளோடு கலகலப்பாக
சிரித்துக்கொண்டு செல்கையில்,
என்னை பார்த்ததும்
ஏன் அமைதி கொள்கிறாய்..
அதை பார்த்தபின் தெரிந்துகொண்டேனடி
"நீயும் என்னைக்காதலிக்கிறாய்" என்பதை...!!!

நீ என்னை கடந்து செல்லும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என்னை பார்த்து
சிணுங்குகிறது..
ஆனால் நீ மட்டும்...!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான் முடிக்கிறேன்
ஒவ்வொரு கவிதையும்..!!
உயிருள்ள காலம் வரை
வற்றிப்போய் விடுமோ
உன் நினைவுகள் என்னிலிருந்து...!!!!