Sunday, January 31, 2010
வெட்கங்களை அள்ளி பூசிக்கொள்…
Wednesday, January 27, 2010
Friday, January 22, 2010
தேவதை ஜாக்கிரதை
மிகவும் பிடித்தது
உன் இதழ்களின்
வரிகளே!
சில்மிஷியே
அருகினில் வா!
*
உன்
வீட்டு வாசலில்
அறிவிக்க செய்
“தேவதை ஜாக்கிரதை”
*
நீ நிலவொளியினில்தான்
நடந்து வருகின்றாய்
பதறுகின்றது என்
மனசு
ஓளியின் வீச்சில்
காயம்பட்டுவிடக்கூடாதே
உன் மேனி என்று..
*
நீ ‘ம்’ கூட
சொல்லவேண்டாம்
கடைக்கண்ணால்
மட்டும் பார்
உனக்கும் சேர்ந்து
நானே காதலிக்கிறேன்!
*
என்னை முதன்முதலாக
பார்த்தபோது
என் தாய் வடித்த
ஆனந்தக் கண்ணீரே
எனக்கும் வழிந்தது
உனை முதன்முதலாக
பார்த்தபோது…
*
“க்ஞங்ங்ங் ந்ணஜ ஒப்ப்
ம்ட்ம்ம்ம் ந்ன்ன்ன்”
புரிகின்றதா?
இப்படித்தான்
நீயில்லாத நேரங்களில்
நான்
*
உனை அழகி என்று மட்டும்
வர்ணிக்கும் தோழி மீது
கோபமாய் வருகின்றது
தேவதையே..
*
நீ
தாமதமாகவே
வருவாய் என்றாலும்
நீ வரும் வரை
துணையாக இருந்த
உன் நினைவுகளை
களையும் போதுதான்
கோபமே வருகின்றது
உன் மீது!
*
சமிபத்தில்
நீயும்
நானும்
லாபமடைந்த விஷயம்
முத்தம்.
*
நீ என்னுடன்
சண்டையிடுவதே
முத்தம் கொடுக்கத்தான்
என்று எனக்கு
தெரியும்
அது உனக்கும்
தெரியும்
பின் எதுக்கு
சண்டை?
*
நீ
எங்காவது
எதையாவது
விட்டுவிட்டு போ
பத்திரப்படுத்த
வேண்டும்
என்னுள் இருக்கும்
உன் நினைவுகளுக்காக..
*
நான் எழுதும்
கவிதைகள் யாவும்
உனக்காகத்தான் என்று
சொல்வது
பொய் என்றாலும்
உண்மையும் உண்டு.
*
எனக்கு தனிமை
மிகவும் பிடித்திருந்தது
அது உன்னுடன்
மட்டும் எனும்போது..
*
நான் எழுதி அனுபிய
கவிகள் யாவும் திருடப்பட்டவையே
உன்னிடமிருந்து
மட்டும்
*
இன்றும்
என்னெதிரே
தேனீர் குடுவை
உனக்காக வாங்கிவைத்திருக்கின்றேன்
நீ பருக அருகிலில்லை
என்றாலும்
உனக்கானவைகளை
நான் என் செய்ய?
*
நான் உன்னிடம்
இதுவரை சொல்லாத
தவிப்பை விட
நீ யாரிடமும்
சொல்லிவிடக்கூடாது
என்ற பயமே
என்னை கவலையடையச்செய்கின்றது
“நான் உன்னை காதலிக்கின்றேன்”.
*
நீரின் மேல்
இலைவிழுந்து போல்
இன்னும்
அடங்கவில்லை என்னுள்
உன் ஞாபக அதிர்வுகள்..
*
புத்தகக் கண்காட்சியில்
உன்னை
என் கண்கள் படிப்பதை
நீ பார்த்துவிட்டதில்
என் கண்களை
கையில் கிடைத்த புத்தகத்தில்
பதித்தேன்..
தலைப்பு காதல்
*
உன்னை என் கவிகள்
வெட்கப்படுத்தும் போதெல்லாம்
நான் நீயாகிவிடக்கூடாதா
என்றெண்ணி நானும்
வெட்கமடைகின்றேன்
*
நீ
கவிதைகள் எழுதவேண்டும்
நீயாக இருந்து
நான் வாசிக்கவேண்டும்
என் கவிகளை
நீ படித்துணர்ந்ததை
போல…
*
உன்னைக் கண்டமுதலே
வானமும் அதன் நீலமும்
தனித்தனியே
உணர்ந்து கொண்டேன்
*
உன்னை கண்டமுதல்
இதுநாள் வரை
நீ எங்கு,எப்படி இருந்தாய்
என்பதிலேயே
தாகம்கொண்டது
மனசு
*
என் கால்களிடம்
கேட்டுப்பார்
உனக்காக காத்திருந்த
தருணங்களில்
என் கால்களின்
வலியை எப்படிகரைத்தேன்
என்று அழகிய கவியாக
சொல்லும்..
உன்னை காதலிக்க ஆரம்பித்தபிறகு
அவைகளும் கவிஎழுதுகின்றன
*
என் ஆனேக கிறுக்கல்களை
நீ படித்ததாலேயே அவைகள்
இன்று கவிதைகளாகிவிட்டன
*
நான் மொழிப்பெயர்க்க
ஆசைப்படும் அனைத்து
தருணங்களும்
உன் தனிமையே..
*
விடிந்த பின்னும்
தொடரும், நாம்
தொடங்கிய நேற்றைய பேச்சு
தொலைபேசி இன்னும்
செவியோரம் சினுங்கிக்கொண்டிருக்கின்றது
அனைக்க மனமில்லாமல்
*
உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது..
நம் கூடலில்
*
வெளிர்ததெல்லாம்
தேவதைகள் என்றென்னியிருந்தேன்
உன்னைகாணும் வரை
சாம்பல்நிறத்து
தேவதையே!
*
நீ ரசிக்கும் பட்டாம்பூச்சி
இன்றும் என் விரல்களில்
முத்தங்கள் பதிக்கின்றன
உனக்கா காத்திருந்த
இந்த தருணத்தில்
*உன் பிரிவினில்
கண்களில்கரையும் உப்புக்கரைசலை
உள்வாங்கிக்கொண்டுபிரிதலில் உனக்கொன்றும்
சலனமில்லை
என்பதுபோல் பிரிந்துவிடுவாய்
இருந்தும்
ஏன்? விழிகொண்டு
பேசமறுக்கின்றாய்
நம் சந்திப்புகளில்*நீ
என் மனப்பூ
சேமித்த உணர்வுத்துளியடி..பொறுத்திருந்துபார்
காதல் முத்தொன்றை
பரிசளிப்பேன்
பூவின் இதழ்களை
விரித்து…
* நம் நடைப்பயணஙகளில்
நமக்கு துணையாக
பூமரங்கள் சிந்திடுமே
அந்த சிவப்பு பூக்களை
நினைவிருக்கின்றதா?
அவைகளே உனக்கான
சந்தங்களை எனக்கு
தந்து, கவிஞனக்கின என்னை
இன்று!
*
ஆசை மிகுதியில்
உன் கனனம் தொடும்
மழைத்துளியை
அவசரப்பட்டு
உதறிவிடாதே
என் கவிதை
கருவறையில்
அவைகள்தான்
உன் சாயல்
குழந்தைகள்…
*
உன்னால் காயம்பட்டு
உடைந்துபோனது
என் இதயம் – பின்
சிதரிய எண்ணிக்கையில்லா
அவைகள், மீண்டும்
முந்தைய அளவைவிட
உன்னை விரும்பச் செய்து
வலியினிலும் இன்பமடைந்து
உடைதலுக்கு தயாராகின்றன
மீண்டும்.
*
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ
உடைக்க நினைக்காதே
அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்
மெல்லியவளே!
*வார்த்தைகளுக்குள்
அடங்காத
என் வாசகியேநீ வாசிக்க
தவம் கிடக்கின்றது
என் கவிகள்
*
உன் நிலம்
மழைப்பொழிய
காத்துக்கிடக்கின்றது
என் வானம்
முரண்களுக்கு
முடிவில்லை
காதலில் மட்டும்
*நில்
கவனி
காதலில்
காதலி
*
என் எட்டு திசைகளிலும்
நீயே நிரம்பிக்கிடக்கின்றாய்
என அறிந்து
நான் பாதசாரியாக
பயணித்த என் தேடலில்
நீ எந்த திசையில்
உயிர்வாழ்கின்றாய்
என அறியாது
திசையினையே
நீயெனக்கொண்டு
சூவாசிக்கின்றது
என் நுறையீரல்
*
சொல்வதை கேளாமல்
சட்டென
சிரித்துவிடுகின்றாய்
நீ
அப்பொழுதெல்லாம்
ஆசையில் வீழ்கின்றது
கன்னக்குழியுள்
என் மனசு.
*
என் செய்வது
நீ அன்னிச்சையாக
சுவாசித்து விடுகின்றாய்
காற்றை
தென்றலென்று
நான் ரசித்த தபு சங்கர் கவிதைகள்
நீ குடை விரித்ததற்காக
கோபித்துக் கொண்டு
நின்று விட்ட மழையைப்
பார்த்தவனாகையால்
இன்று
சட்டென்று மழை
நின்றால் நீ எங்கோ
குடை விரிப்பதாகவே
நினைத்துக் கொள்கிறேன்.
---------------------------------
நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்..
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.
---------------------------------
எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
------------------------
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
-----------------------
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
======================>>தபு சங்கர்
காதல் வாங்கினால் முத்தம் இலவசம்!
எதிர் வீடு காலியான +2 விடுமுறையில்
இதயத்துக்குள் குடி புகுந்தது ஒரு கனவு:
“இரண்டிலும் ஒரு தேவதை குடிவருவாளா?”
உறங்கிக் கொண்டிருக்கும்போதே உன் கனவு பலித்ததுண்டா?
நான் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில்தான்
உன் குடும்பம் எதிர்வீடு புகுந்தது!
பழகிய ஒரே வாரத்தில்
என் வீட்டு சமையலறை வரை வருகிறாய்!
எப்போதும் உன்வீட்டு வாசல்படி தாண்டியதில்லை நான்!
என் அம்மாவிடம் கதையளக்கிறாய்…
என் அப்பாவிடம் பேசுகிறாய்…
என் தங்கையிடம் விளையாடுகிறாய்…
என்னை மட்டும் பார்க்கிறாய்!
அடுத்த வாரமே கலந்தாய்வு*க்கு ஒன்றாய்ப் பயணிக்கிறோம் !
மறு வாரமே ஒரே கல்லூரியில் சேர்கிறோம்!!
ஒருமுறை தானே இயற்கை வரம் தரும்…
வாரா வாராம் தருமா என்ன?
அந்த ஒருமாதமும்
கோடை விடுமுறையல்ல…
கொடை விடுமுறை!
என் வீட்டில் எல்லோரிடமும் பேசுகிற நீ!
உன் வீட்டில் யாரிடமும் பேசாத நான்!
நம்முடன் பேசியும் பேசாமலும் நாம்!
முதலாமாண்டு எதிர்வீட்டுப்பெண்ணாய்…
இரண்டாமாண்டு கல்லூரித்தோழியாய்…
மூன்றாமாண்டு நலம்விரும்பியாய்…
என் இதயவாசல்கள் ஒவ்வொன்றாய்த் திறந்து உள்நுழைகிறாய்!
மூன்றாண்டுகளாக…
எதையெல்லாமோப் பேசி தீர்த்த நாம்
இறுதியாண்டு முழுதும் காதலைப் பற்றியே பேசியதன்
காரணம் அப்போது தெரியவில்லை!
காதலைப் பற்றிய உன் எண்ணங்களை
முழுதாய் அறிந்து கொண்டபோதும்
உன்னை மனைவியாக அடையப் போகிறவன்
கொடுத்து வைத்தவன் என்றே
நினைத்துக் கொண்டது என் மனது!
பின்னொரு நாள்
என் கவிதைகளை வாசித்து விட்டு
என்னைக் கணவனாய் அடையப் போகிறவள்
கொடுத்து வைத்தவள் என்று நீ சொல்ல
மெல்லிய சலனம் எனக்குள்!
அதன்பிறகு
என் மீது நீ அக்கறை கொள்ளும்
ஒவ்வொரு நிகழ்விலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
உடைந்து கொண்டிருந்தது
உன் மீது நான் கொண்டிருப்பது
நட்புதான் என்ற என் நம்பிக்கை!
எப்போது, எப்படி, எதனால்
என்கிற கேள்விக்கெல்லாம்
பதில் சொல்லாமல்
நம் நட்புக்குள்ளே
சத்தமில்லாமல் மெதுவாய்
நுழைந்து கொண்டிருந்தது
என் காதல்!
ஒருநாள் பழைய நண்பனிடம்
உன்னை அறிமுகப் படுத்துகையில்
உதடு சொன்னது – “எதிர் வீட்டுப் பெண்”
உள்ளம் சொன்னதோ – “எங்க வீட்டுப் பெண்”
மின்சாரம் இல்லாத அந்தப் பௌர்ணமி இரவில்
மொட்டை மாடியில் கூடியிருக்கிறது குடும்பம்…
என்னிடம் தனியாக கேட்கிறாய்…
“ஒரு கவிதை சொல்லு”
“எதைப் பற்றி?”
“ம்ம்ம்… என்னைப் பற்றி?”
“சுடிதாரிலும் வருகிறாய்…
தாவணியிலும் வருகிறாய்…
நீ புதுக் கவிதையா? மரபுக் கவிதையா?”
“ம்ம்ம்… காதல் கவிதை!”
மின்சாரம் வந்தது!
நீ மறைந்து போனாய்…
எனக்கேத் தெரியாமல் நானுன்னைக் காதலிக்க…
உனக்கேத் தெரியாமல் நீயென்னைக் காதலிக்க…
காதலுக்கு மட்டுந்தான் தெரிந்திருக்கும்,
அப்போது நாம் காதலித்தது!
அடுத்துவந்த நாட்களில்
வார்த்தைகளைத் தாண்டி
பார்வைகள் பேசிக்கொண்டதை
வார்த்தையில் வடிக்க முடியுமா?
எல்லோர்க்கும் முன்பு பேசிக்கொண்டிருந்தவள்,
யாருக்கும் தெரியாமல் ரகசியமாய்ப் பேசுகிறாய்!
பேசுவதே பாதிதான்…அதிலும் பாதியை
பார்வையில் சொல்லிவிட்டுப் போனால்
எப்படிப் புரியும்?
பன்மொழி வித்தகனாக யாராலும் முடியும்!
பெ(க)ண்மொழி வித்தகனாக யாரால் முடியும்?
காதல்
சொல்லப்படுவதும் இல்லை!
கேட்கப்படுவதும் இல்லை!
அது உணரப்படுவது!
உணர்ந்ததும் பாடாய்ப் படுத்துவது!
நம் காதலை நாம் உணர்ந்தபிறகும்
யார் முதலில் சொல்வதென நம்மிடையேப் போட்டி!
நடுவராய் இருக்கிறது நம் காதல்!
பெண்கள் காதலைச் சொல்லும்போது
வெட்கம் பிடுங்கித் தின்னுமாம்…
ஆண்கள் காதலைச் சொல்லும்போது
பயம் வந்து கொல்லுமாம்…
உன் வெட்கத்துக்காக நான் காத்திருக்க…
என் தைரியத்தை நீ பரிசோதிக்க…
தவித்துக் கொண்டிருந்தது நம் காதல்!
வென்றாய் நீ!
சொல்லிவிடத் துணிந்து விட்டேன் நான்!
எப்படி? எப்படி?? எப்படி???
“சொல்லுவது எளிது, சொன்னதை செய்வது கடினம்!” **
காமத்துப்பால் எழுதிய வள்ளுவனா இப்படி சொன்னது?
காதல் மட்டும் இங்கே முரண்படுகிறது!
அதே மொட்டை மாடி…
மாலை நேரம்…
நீ…நான்…தனிமை…
“உங்கிட்ட ஒன்னு சொல்லனும்; ஒன்னு கேட்கனும்”
“சொல்லு”
“நான் ஒரு பொண்ணக் காதலிக்கிறேன்”
“கேளு”
“அ..து.. நீ.. தா..னா..ன்..னு.. தெ..ரி..ய..னு..ம்…”
திக்..
திக்..
திக்..
“ம்ம்ம்… இது எனக்கு முன்னாடியேத் தெரியுண்டா லூசு!”
சொல்லிவிட்டு வெட்கப் பட்டாய் நீ!
தோற்கவில்லை நான்!
“காதலுக்குப் பரிசெல்லாம் இல்லையா?”
“என்ன வேணும்?”
“ஒரு முத்தம்”
சிரித்துக் கொண்டே என் உள்ளங்கை எடுக்கிறாய்…
“நீ
உதட்டில் கொடுப்பது
மட்டும் தானடி முத்தம்…
மற்றதெல்லாம் வெறும் சத்தம்!”
சொல்லிவிட்டு, புன்னகையோடு நான் பார்க்க ,
“நீ ரொம்பப் பேசற.. உனக்குக் கையிலக் கூடக் கிடையாது.. இந்தா இப்படியே வாங்கிக்க” என்று சொல்லி
“உன் உள்ளங்கையில் முத்தமிட்டு
உதடு குவித்து ஊதி விட்டாய்…
காற்றிலெல்லாம் கலந்துபோனது,
உன் காதல் வாசம்!”
“என்னிடம் காதல் வாங்கினால்
முத்தம் இலவசம்” என்றாய்…
“என்னிடம் காதல் வாங்கினால்
மொத்தமாய் நானே இலவசம்” என்றேன்…
தனக்கொரு க(வி)தை
இலவசமாய்க் கிடைத்த மகிழ்ச்சியில்
நம்மையேப் பார்த்துக் கொண்டிருந்தது…
நம் காதல்!